ads

எதிர்காலத்தில் திரைப்படங்களை விட அரசியலில் கவனம் செலுத்துவேன்: உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் பேட்டி

உதயநிதி ஸ்டாலின் பேட்டி

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் கட்சி மற்றும் தேர்தல் பிரச்சாரங்களில் முக்கியத்துவம் அளித்து வருகிறார். அவர் சினிமாவை விட அரசியலில் கவனம் செலுத்துவார் என்றும் கூறுகனார். தி.மு.க.வில்  இளம் உறுப்பினர் உறுப்பினராக இருந்துகொண்டு ஏன் கட்சிக்கு பிரச்சாரம் செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு அவர் கூறியதாவது, "நான் ஒரு அரசியல் குடும்பத்தில் இருந்து வருகிறேன் என்பதால் இது எனக்கு புதியதல்ல. கடந்த 25 ஆண்டுகளாக நான் பிரச்சாரம் செய்கிறேன். ஆனால் அண்மை ஆண்டுகளில் நான் திரைப்படங்களில் நடித்துள்ளதால், இப்போது பொதுமக்களிடமிருந்து எனக்கு அதிக கவனம் கிடைக்கிறது" என்றார்.

பிரச்சாரங்களில் தந்தை அல்லது தாத்தா, யார்பாணியை விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, "கடந்த 23 நாட்களில் (தேர்தல் பிரச்சாரத்தில்), நான் மக்களுடன் தொடர்பு கொள்ளும் என் சொந்த பாணியை பின்பற்றியிருக்கிறேன். சில இடங்களில், என் உரையில் குறிப்பிட மறந்துவிடக்கூடிய சில குறிப்பிட்ட விஷயங்களைப் பற்றி பேசும்படி மக்கள் என்னைக் கேட்கிறார்கள்."என்று பதிலளித்தார்.

எதிர்காலத்தில் அரசியல்  அல்லது திரைப்படம் எதில் அதிக கவனம் செலுத்துவீர்கள் என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில், "அரசியலிலும் கட்சியிலும் மேலும் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன். நான் நல்ல மற்றும் பொருத்தமான திரைக்கதைகளை காண்பித்தால், படங்களும் செய்வேன். இப்போது, ​​நான் மூன்று படங்களை கையில் வைத்துள்ளேன். நிச்சயமாக எதிர்காலத்தில் கட்சியில் அதிக ஈடுபாடு செலுத்துவேன்."

இந்தத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய கட்சி உங்களை அனுப்பியுள்ளது உங்களுக்கு பிரபலமாக்குவதற்கா அல்லது மாநில அரசியலில் முதிர்ச்சியடைவதற்கா என்பதற்கு, "நான் மட்டுமல்ல, பல நட்சத்திர பிரச்சாரகர்கள் தி.மு.க. கட்சிக்கு பிரச்சாரம் செய்கிறார்கள். வாக்குகளைப் பெறுவது மட்டுமே ஓரே நோக்கம். என்னை பிரச்சாரம் செய்ய அனுமதித்த முடிவுக்கு வேறு காரணம் இல்லை." என்று கூறி முடித்தார்.

எதிர்காலத்தில் திரைப்படங்களை விட அரசியலில் கவனம் செலுத்துவேன்: உதயநிதி ஸ்டாலின்