ads

வேலூர் தேர்தலை ரத்து செய்ததற்கான விளக்கத்தை கொடுத்தது தேர்தல் ஆணையம்

வேலூர் தேர்தலை ரத்து செய்ததற்கான விளக்கம்

வேலூர் தேர்தலை ரத்து செய்ததற்கான விளக்கம்

வேலூர் மக்களவைத் தேர்தல் ரத்தை அறிவித்த சில மணிநேரத்தில் தேர்தல் ரத்து செய்ததற்கான காரணத்தையும், விரிவான விளக்கத்தையும் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. வருமான வரி துறை தேர்தல் செலவின கண்காணிப்பு அதிகாரி ஆரம்ப அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 30 அன்று அறிக்கையை சமர்ப்பித்தது. அறிக்கையின் படி தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்தின் தந்தையும் தி.மு.க. பொருளாளருமான துரை முருகனின் வீட்டிலிருந்து ரூ 10.57 லட்சம்விவரிக்க முடியாத பணம் கைப்பற்றப்பட்டது.

வருமான வரி துறை நிர்வாக இயக்குனர் ஏப்ரல் 5 ம் தேதி அன்று சமர்ப்பித்த அறிக்கையில், தி.மு.க. செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன் மருமகனான தாமோதரனின் வளாகத்தில் தேடுதல் வேட்டை நடத்திய போது ரூ. 11.48 கோடி பணத்தை திருப்பிவிட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர், கனரா வங்கியின் ரொக்க இருந்து பணம் வந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. வேலூர் கனரா வங்கி பிராந்திய அலுவலகத்தின் மூத்த மேலாளராக தயாநிதியின் கட்டளையின்படி பணம் கொடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாணய பரிமாற்றதிற்காக பணம் எடுக்கப்பட்டதாக தயாநிதி அவர்கள் ஒப்புக்கொண்டார். பறிமுதல் செய்யப்பட்ட தொகுக்கப்படாத பணப்பகுதியும், பயன்படுத்தாத லேபல்களும் தொகுதி மக்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதையே சுட்டிக்காட்டுகின்றது என்று வருமான வரித்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஏப்ரல் 12 ம் தேதியன்று தலைமை தேர்தல் அதிகாரி ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் பணப்பரிமாற்றங்களை மேற்கோள் காட்டி, வேலூர் தேர்தலை நியாயமான முறையில் நடத்த முடியாது என்று கூறி இருந்தார்.

வாக்காளர்களை தூண்டும் விதமாகவும் கவரும் விதமாகவும் வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளும் பணத்தை இரகசிய முறையில் பெரும் அளவில் விநியோகித்து வருகின்றனர். இவ்வாறான செயல்களால் தூய்மையானா தேர்தல் நடைமுறையை கெடுக்கும் விதமாகவும் மேலும் தேர்தல் நிலைப்பாட்டைத் தடுக்கும் விதமாகவும் உள்ளன. தேர்தல் நேரங்களில் பணபரிமாற்றங்கள் அவமரியாதையை ஏற்படுத்துகின்றது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

வேலூர் தேர்தலை ரத்து செய்ததற்கான விளக்கத்தை கொடுத்தது தேர்தல் ஆணையம்