ads

மன்னிப்பு கேட்ட வால்டர் படத்தின் வில்லன் நட்டி நடராஜன்

வால்டர் படத்தின் வில்லன் நட்டி நடராஜன்

வால்டர் படத்தின் வில்லன் நட்டி நடராஜன்

மன்னிப்பு கேட்ட வால்டர் படத்தின் வில்லன் நட்டி நடராஜன்: சிபி சத்யராஜ்  நடிப்பில் நாளை வால்டர் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த வால்டர் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களும் படத்தில் நடித்த தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

வால்டர் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நட்டி நடராஜன் மேடையில் பேசும்போது மிக எளிமையாக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார். இதற்கு காரணம், அனைவரும் கூடியிருந்த செய்தியாளர் சந்திப்பில் தான் மட்டும் காலதாமதமாக வந்தமைக்கு மன்னிப்பு கேட்டார்.

வால்டர் ஐந்து வருட போராட்டத்திற்கு பின் உருவான திரைப்படம், சிபி சத்யராஜ்

வால்டர் படத்தின் செய்தியாளர் சந்திப்பு தொடங்கும் முன்னரே படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் அனைத்து தொழில்நுட்ப வல்லுநர்கள் வந்து நிலையில், தான் போக்குவரத்துக்கு நெரிசல் காரணமாகவும், இங்கு வருவதற்கு முன் பார்த்துக்கொண்டு இருந்த வேலை தாமதமாக முடிந்த காரணத்தினால், குறிப்பிட்ட நேரத்திற்கு தன்னால் வரமுடியவில்லை, இதனால் தன்னை மன்னிக்கும் படி தனது பேச்சை தொடங்கியவுடன் கேட்டு கொண்டார்.

சில கலைஞர்கள் பட விழாவிற்கு வர தவறுவதும் உண்டு மற்றும் தாமதமாக வருவதும் உண்டு, இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தாலும் நட்டி நடராஜன் மன்னிப்பு கேட்டது, வில்லனாக நடித்தாலும் இவரின் ஹீரோ குணத்தை காட்டுகிறது.

மன்னிப்பு கேட்ட வால்டர் படத்தின் வில்லன் நட்டி நடராஜன்

மன்னிப்பு கேட்ட வால்டர் படத்தின் வில்லன் நட்டி நடராஜன்