ads

மோகன்லால்: த்ரிஷ்யம் 2 படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது

மோகன்லால்: த்ரிஷ்யம் 2 படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது

மோகன்லால்: த்ரிஷ்யம் 2 படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது

மோகன்லாலின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் "த்ரிஷ்யம் 2" , இன்று பூஜையுடன் தொடங்கியது. 2013ஆம் ஆண்டு வெளியான த்ரிஷ்யம் படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப், த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.

வெற்றி படமான த்ரிஷ்யம் படத்தின் அதே குழு, இன்று பூஜை விழாவுடன் படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளது. பூஜை எர்ணாகுளத்தில் நடைபெற்றது, ஆரம்ப கட்ட படப்பிடிப்பு நகரத்தில் படமாக்கப்படும் என்றும் பின்னர் இரண்டு வாரங்களுக்குப் பிறகு தொடுபுழாவில் படப்பிடிப்பு நடக்கும் என்று தெரிகிறது.

மோகன்லால்: த்ரிஷ்யம் 2 படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது

பூஜை விழாவில் இயக்குனர் ஜீத்து ஜோசப், தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பவூர், நடிகர்-அரசியல்வாதி  கணேஷ் குமார் மற்றும் ஒரு சிலர் கலந்து கொண்டனர். மோகன்லால் இந்த மாதம் 25 ஆம் தேதிக்குள் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அனைத்து COVID-19 விதி முறைகளையும் பின்பற்றி இந்த குழு படப்பிடிப்பில் ஈடுபடும் என்று தயாரிப்பு நிர்வாகம் சார்பில் கூறியுள்ளனர். ஜீத்து ஜோசப் படத்தை பற்றி கூறும்போது, முதல் பாகத்தின் தொடர்ச்சி இரண்டாம் பாகத்திலும் இருக்கும் மற்றும் முதல் பாகத்தை போல், கதைக்களம் விறுவிறுப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

முதல் பாகமான த்ரிஷ்யம் படம் 2013ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி, மலையாள திரை உலகில் ஒரு புதிய முத்திரையை பதித்தது. காரணம், ஒரு சாதாரண குடும்ப படத்தில் நடக்கும் ஒரு நிகழ்வை எதார்த்தமாகவும் த்ரில்லிங்காகவும் படமாக்கப்பட்டதுதான். முதல் பாகத்தை போல் த்ரிஷ்யம் இரண்டாம் பாகமும் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

மோகன்லால்: த்ரிஷ்யம் 2 படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது

மோகன்லால்: த்ரிஷ்யம் 2 படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது