இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படும் பிரபுதேவா கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக திரைப்பட துறையில் ஒரு நடன கலைஞராகவும் நடிகராகவும் இருக்கிறார். அவரது தந்தை ஒரு நடன இயக்குனராக இருந்தார், பிரபுதேவா 1980 களில் இருந்து ஒரு குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். தனது இளம் பருவத்திலிருந்தே திரைப்பட துறையில் தொழில் நுட்பத்தில் நுழைந்து, நடன வடிவமைக்கிற்காக இரண்டு தேசிய விருதுகளை பெற்றுள்ளார். அவர் ஒரு சிறந்த நடிகர் மற்றும் அல்லாது ஒரு சிறந்த இயக்குனரும் கூட.
பிரபுதேவா இந்திய திரைப்பட துறையில் ஒரு வெற்றிகரமான நட்சத்திர கலைஞர். பாலிவுட்டில் இருந்து பல மொழி படங்களுக்கு அவர் இயக்கி, நடித்து, பல திரைப்பட பாடல்களுக்கு நடன இயக்கமும் செய்துள்ளார். அவர்களில் பெரும்பாலானவை வெற்றிகரமான முயற்சிகள் ஆகும். மேலும் அவர் குறிப்பான கதை முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படங்களையே தேர்ந்தெடுப்பார். இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக அவரது நடிப்பிற்காக அவர் பாக்ஸ் ஆபிஸில் இன்னும் அவரது மிகுதி அல்லாத தனித்துவமான நடிப்பு, சிறந்த இயக்குநரான மகேந்திரன் போன்ற ஆர்வலர்களைக் கொண்டது.
சார்லி சாப்ளின் 2: குடியரசு தினம் அன்று வெளியான இந்த படத்தில் பிரபுதேவா, பிரபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இது 2002 இல் வெளிவந்த காமெடி படமான சார்லி சாப்ளின் படத்தின் தொடர்ச்சியாகும். சக்தி சிதம்பரம் இயக்கிய படத்திற்காக பிரபுதேவா பாராட்டப்பட்ட போதிலும் பிரபுதேவாவுக்கு இது ஒரு சராசரி திரைப்படமாகவே இருந்து பாக்ஸ் ஆபீஸில் தோல்வியடைந்தது.
மெர்குரி, லட்சுமி: தேவி வெற்றிக்கு பிறகு ஏ.எல். விஜய் மற்றும் பிரபுதேவாவின் மற்றொரு படைப்பான லக்ஷ்மி நடனத்தை மையமாக கொண்ட படம். பிரபுதேவாவின் கதாபாத்திரம் அவருக்கு பொருத்தமான நடன கலைஞராக வடிவமைத்திருந்தாலும், அது பார்வையாளர்களை எதிர்பார்த்தவாறு கவரவில்லை. திரைப்பட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் மெர்குரி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம். பிரபுதேவா பாதரச விஷத்தின் காரணமாக குருடனாக இருந்தபோது தன் சாவுக்கு காரணமாக இருந்த கொலையாளிகளை ஆவியாக வந்து பழிவாங்கி பார்வையாளர்களை பீதியில் ஆழ்த்தியது மெர்குரி. படத்தில் அருமையாக நடித்த பிரபு தேவாவுக்கு பாராட்டுகள் குவிந்தன.
தேவி முதல் பாகம் ஒரு திகில் மற்றும் நகைச்சுவை முக்கியத்துவம் கொண்ட பொழுதுபோக்கு திரைப்படம். சராசரி செலவில் படம் எடுக்கப்பட்டு இருந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் 50 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றியை கண்டது. தேவி 2 பிரபுதேவா, தமன்னா மற்றும் பல கலைஞர்கள் நடித்து அதேபோல் காமெடி, திகில் போன்ற பொழுதுபோகம்சதோடு வெளிவரவுள்ளது. கோவை சரலா, நந்திதா ஸ்வேதா போன்ற நடிகர்கள் தொடர்ச்சியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் பாகத்தின் கதையை தாண்டி இரண்டாம் பக்கத்தில் தமன்னாவோடு சேர்ந்து பிரபு தேவாவின் உடலிலும் பேய் புகுந்தது போன்று கதையை சித்தரித்துள்ளார் விஜய். கோவை சரளா மற்றும் பேய் பிடித்த கணவன் மனைவியின் மோதல் பார்வையாளர்களுக்கு ஒரு நல்ல கோடைகால பொழுதுபோக்காக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: ஹாரர் தொடர்ச்சியான பிரபு தேவா - தமன்னாவின் தேவி 2 ஸ்பெஷல்

