இன்று தமிழகம் முழுவதும் ஓட்டு பதிவு நடந்து கொண்டிருக்கிறது. பெரும்பாலும் இளைஞர் சமுதாயம் அதிலும் சமூக வலயத்தளங்களை உபயோகித்தவர்கள் இன்று ஓட்டு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
வயதானவர்களின் ஓட்டுக்களை விட இந்த முறை இளைஞர்களின் ஓட்டுகள் மத்தியில் ஆட்சி அமைக்க கூடுதல் பலம் பெற்றுஇருக்கிறது. வயதானவர்கள் மற்றும் நடுத்தர வயதினர் பெரும்பாலும் அவர்களின் விருப்ப கட்சிகளான அதிமுக மற்றும் திமுக கட்சிகளுக்கே வாக்களிப்பார்கள்.
இந்தமுறை நடிகர் கமல் ஹாசனின் புதிய கட்சி மற்றும் சீமானின் கட்சிக்கு இளைஞர்களின் ஓட்டுகள் பிரிய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இவ்விரு கட்சிகள் எந்த ஒரு மத்திய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளுடன் கூட்டணியில் இல்லாதலால், மக்கள் இவர்கள் மூலம் எப்படி பயன்பெறுவார்கள் என்பது மற்ற பெரிய கட்சிகளின் கருத்தாகவுள்ளது.
இந்த முறை பலத்த போட்டி நிலவுதலால் மத்தியில் ஆட்சி அமைக்க எந்த மாநில கட்சிகள் வெற்றிபெறும் என்பது அனைவரிடமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பெருவாரியான மக்கள் ஓட்டளித்தால் கண்டிப்பாக மாற்றங்கள் நிகழும்.