ads

தலைவர் பொறுப்பில் இருந்து விடுபட உள்ளாரா காங்கிரஸ் தலைவர் ?

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி

மக்களவை தேர்தல் முடிவுக்கு பின்னர் எல்லா மாநிலத்தை சார்ந்த காங்கிரஸ் கட்சி பிரமுகர்களுடன் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மக்களவை தேர்தலில் கட்சின் படுதோல்விக்கான காரணத்தை பற்றி விவாதித்தனர். காங்கிரஸ் செயல் குழுவும் இக்கூட்டத்தில் பங்கேற்றது. 

கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் செயல் குழு சந்திப்பு நடைபெற்றது. கூட்டத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோஹன் சிங், உத்தரபிரதேச பொறுப்பாளர் பிரியங்கா காந்தி வதேரா, பஞ்சாப், ராஜஸ்தான், மத்திய பிரதேஷ், சட்டிஸ்கர் முதல்வர்களும், புதுச்சேரி முதல்வரும் கலந்து கொண்டனர்.

கட்சியின் மிகப்பெரிய முடிவெடுக்கும் அமைப்பின் கூட்டம், கட்சியின் தோல்விக்கான காரணமும், தேர்தல் வாக்குறுதிகள் மக்களை சமாதானப்படுத்தாதது ஏன் என்பதற்கான காரணங்கள் ஆலோசிக்கப்பட்டது.  

தேர்தலில் கட்சி மோசமான செயல்திறனுக்கு தார்மீக பொறுப்பை காங்கிரஸ் தலைவர் ஏற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஊடகங்களில் செய்தி கசிந்தது. இருப்பினும், ராகுல் காந்தி ராஜினாமா செய்வதற்கான வெளிவந்த அறிவிப்பு "தவறானது" என்று காங்கிரஸ்  வட்டாரங்கள் தெரிவித்தன.

மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், ஏ.கே.அந்தோனி, அஹ்மத் படேல், குலாம் நபி ஆசாத், ஷீலா தீட்சித், மல்லிகார்ஜூன் கர்கே, அம்பிகா சோனி, ஆனந்த் ஷர்மா மற்றும் ஜோதிராதித்யா சிந்தியா உள்ளிட்ட மற்ற கட்சிக் பிரமுகர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் ஆகியோரும் சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல்வர் பூபஷ் பாகேலும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

2014 ஆம் ஆண்டு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் 44  இடங்களை மட்டுமே வென்றது. இந்த ஆண்டு வெளியான தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 18 மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் கட்சியின் செல்வாக்கு மக்களிடம் இருந்து பெறமுடியவில்லை.

கட்சியின் பெரும்பான்மையை நடந்த தேர்தல் தேர்தலில் காட்டப்படாததால் மோசமான செயல்திறனுக்கு பொறுப்பேற்று தலைவர்கள் சிலர் தங்கள் ராஜிநாமாக்களை ஏற்கனவே அனுப்பப்பட்டதாக ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 

உத்திரப்பிரதேச காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர் மற்றும் ஒடிசா காங்கிரஸ் தலைவர் நிரஞ்சன் பட்நாயக் ஆகியோர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளனர்.

தலைவர் பொறுப்பில் இருந்து விடுபட உள்ளாரா காங்கிரஸ் தலைவர் ?