ads

கொரோனா மருத்துவ முகாமாக மாறும் நடிகர் கமல்ஹாசன் வீடு

கொரோனா மருத்துவ முகாமாக மாறும் நடிகர் கமல்ஹாசன் வீடு

கொரோனா மருத்துவ முகாமாக மாறும் நடிகர் கமல்ஹாசன் வீடு

கமல்ஹாசன் தனது வீட்டை தற்காலிக கொரோனா மருத்துவமனையாக மாற்ற அரசாங்கத்திடம் அனுமதி கேட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதை அடுத்து, நாடு முழுவதும் இந்த நோய் பரவாமல் தடுக்க இந்திய அரசு முழு வேக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இப்போது, ​​நடிகர் மற்றும் அரசியல்வாதியாக இருக்கும் கமல்ஹாசன் தனது பங்களிப்பை அளிக்க தயாராகுகிறார்.

கமல்ஹாசன் தனது சமீபத்திய ட்வீட்டில், இந்த நெருக்கடியான சூழ்நிலையில், மக்கள் நீதி மையத்தில் இருக்கும் மருத்துவ உறுப்பினர்களை மருத்துவ கடமைகளை செய்ய விரும்புவதாக கூறினார். இந்த நேரத்தில் மருத்துவ உதவி தேவைப்படும் ஏழை மக்களுக்கு உதவுவதற்காக தனது வீட்டை மருத்துவமனையாக மாற்ற முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். அரசாங்கம் அனுமதித்தால் தனது மருத்துவ உதவியைத் தொடங்க அவர் தயாராக உள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 144 தடை உத்தரவு இருக்கும் சூழ்நிலையில், கொரோனா தொத்து வராமல் இருக்க மக்கள் அனைவரும் வீட்டினுள் பாதுகாப்பாக இருக்க சில பிரபலங்கள் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

மேலும், நாடு முழு அடைப்பில் உள்ளதால், கமல்ஹாசன் தனது கடிதத்தில், இந்த அசாதாரண சூழ்நிலையில், விவசாயத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், மீனவர்கள் மற்றும் தினசரி வேலை செய்பவர்களுக்கு நிதி உதவிகளை வழங்குமாறு பிரதமரிடம் கேட்டுக்கொண்டார்.

கொரோனா மருத்துவ முகாமாக மாறும் நடிகர் கமல்ஹாசன் வீடு