ads

தன் குழந்தையை கணவர் ஈஸ்வர் அசிங்க படுத்தியதாக கூறும் டிவி நடிகை ஜெயஸ்ரீ

ஈஸ்வர், டிவி நடிகை ஜெயஸ்ரீ

ஈஸ்வர், டிவி நடிகை ஜெயஸ்ரீ

தன் குழந்தையை கணவர் ஈஸ்வர் அசிங்க படுத்தியதாக கூறும் டிவி நடிகை ஜெயஸ்ரீ : டிவி நடிகை ஜெயஸ்ரீ சன் டிவியில் வந்த வம்சம் தொடரில் பிரபலமானவர். இவருக்கும் டிவி நடிகர் ஈஸ்வருக்கும் திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவர்களிடையே கருத்து வேறுபாடு திருமணமான ஆரம்பத்தில் இருந்த வந்துள்ளது. 

சமீபகாலமாக ஈஸ்வரின் நடவடிக்கைகள் சரியாக இல்லை என்றும், மது பழக்கத்திற்கு அடிமையானவர் திருந்திவிடுவார் என்று எண்ணுகையில், கஞ்சா பிடிக்கும் பழக்கமும் தற்பொழுது அதிகரித்துள்ளதாக ஜெயஸ்ரீ  கூறியுள்ளார்.

தொடர்ந்து மது அருந்திவிட்டே வீட்டிற்கு வரும் ஈஸ்வர் எங்களிடம் மரியாதையாக நடந்து கொள்வதில்லை. மற்றும் தனக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதையும் பொருட்படுத்தாமல், குழந்தை பாத்ரூமில் இருக்கும் போது போதையில், பெண் குழந்தையின் மேல் சிறுநீர் கழித்து உள்ளார் என்று மிகுந்த மனவேதனையுடன் தெரிவித்துள்ளார்.

சிறிது நாட்களாக விவாகரத்து வழங்கும் படி மது அருந்திவிட்டு தகராறு செய்துள்ளதாகவும் தெரிகிறது. மற்றொரு டிவி நடிகை மகாலட்சுமிக்கும், தன் கணவர் ஈஸ்வருக்கும் தொடர்பு உள்ளதாக மற்றவர்கள் கூறிவந்த நிலையில், அவர்கள் இப்பொழுது வெளிப்படையாகவே பழகுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

சில நடிகர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி தங்களது எதிர்காலத்தை தொலைத்தவர்களும் இருக்கிறார்கள், வாழ்க்கையை தொலைத்தவர்களும் இருக்கிறார்கள். ஒரு பெண் குழந்தையை அசிங்க படுத்திய ஈஸ்வரை எப்படி அவருடன் பழகும் டிவி நடிகைக்கு பெரியதாக தெரியவில்லை என்பதே ஆச்சர்யம்.

தன் குழந்தையை கணவர் ஈஸ்வர் அசிங்க படுத்தியதாக கூறும் டிவி நடிகை ஜெயஸ்ரீ

தன் குழந்தையை கணவர் ஈஸ்வர் அசிங்க படுத்தியதாக கூறும் டிவி நடிகை ஜெயஸ்ரீ