ads

தனி ஒருவன் 2 குறித்த ருசீகர தகவலை வெளியிட்டார் இயக்குனர் மோகன் ராஜா

தனி ஒருவன் 2

தனி ஒருவன் 2

ஏ.ஜி.எஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான கிரைம் த்ரில்லர் திரைப்படம் தனி ஒருவன். நடிகர் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்க லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில் கதாநாயகனுக்கு இணையாக வில்லன் கதாப்பாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கும். அது இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. முதலில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நமது தல அஜித் குமாரை அணுகியுள்ளனர் படக்குழுவினர், ஆனால் அவர் ஏற்கனவே மங்காத்தா படத்தில் நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்ததாகவும், தொடர்ந்து நெகட்டிவ் கதாப்பாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை என்றும் மறுத்துவிட்டாராம்.

பிறகு பல விவாதங்களையும், ஃபோட்டோ ஷூட்களை கடந்து நடிகர் அரவிந்த் சுவாமி இந்த படத்தில் வில்லனாக நடிக்க தேர்வானாராம். அவருக்கு இந்த கதாப்பாத்திரம் மிகவும் பிடித்து இருந்ததனால் உடனே ஒகே சொல்லிவிட்டாராம். படத்தில் கதாநாயகனை தாண்டி அரவிந்த் சுவாமியின் ஸ்மார்ட்டான நடிப்பு பெரிதளவும் பேசப்பட்டது. மேலும் இந்தியாவில் குறிப்பாக மருத்துவத்துறையில் நடக்கும் சில அவலங்களை தோலுரிக்கும் வகையில் அமைந்திருந்தது திரைக்கதை. மேலும் பல சட்டத்திற்கு புறம்பான நிகழ்வுகளின் விளைவுகள் இப்படித்தான் இருக்கும் என்று இந்த படம் நமக்கு ஒரு முன்னெச்சரிக்கையாக உருவாக்கப்பட்டிருந்தது. ஆகவே ரசிகர்கள் மத்தியில் இன்றும் இந்த படத்திற்கு ஒரு தனி மரியாதை இருந்து வருகிறது.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது குறித்த அரசல்புரசலான தகவல்கள் சமூக வலைத்தளங்களை கலக்கி வந்தன. ரசிகர்களும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வந்தால் அருமையாக இருக்கும் என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இன்று தனி ஒருவன் படத்தின் இயக்குனர் திரு.மோகன் ராஜா அவர்கள் படத்தின் அடுத்த பாகம் குறித்த செய்தியை தனது டுவிட்டர் பதிவின் மூலம் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். அதில் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து உதவி இயக்குனர்களிடம் விவாதித்துக் கொண்டிருந்த பொழுது, தொலைபேசி மூலம் பிரபல இயக்குனர் ராம், மோகன் ராஜாவை அழைத்து படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேசியதையும் குறிப்பிட்டுள்ளார். இயக்குனர் ராம் தொலைபேசியில் கூறியதாவது, "ராஜா, மறுபடியும் தனி ஒருவன் பாத்துட்டு இருக்கேன், மிகப்பெரிய உழைப்பு, எப்டி இப்படி, அடுத்த பாகத்தை கேர்ஃபுல்லா பண்ணுங்க" என்று கூறியுள்ளார்.

இந்த தகவலைத் தான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இயக்குனர் மோகன் ராஜா அவர்கள், அவரது டுவிட்டிற்கு பதில் டுவிட் செய்த இயக்குனர் ராம், எதிர்ப்பார்புகளுடனும், பிரியங்களுடனும் தனி ஒருவன் இரண்டாம் பாகத்தை பார்த்து ரசிக்க காத்திருகின்றேன் என்று கூறியுள்ளார். இது தற்பொழுது டுவிட்டர் வலைத்தளத்தையும் தாண்டி எல்லா ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது. இது படத்தின் இரண்டாம் பாகத்திற்கு இன்னும் அதிக அளவு எதிர்ப்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கி உள்ளது.

தனி ஒருவன் 2 குறித்த ருசீகர தகவலை வெளியிட்டார் இயக்குனர் மோகன் ராஜா