ads

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் குழுவினர் மீது மும்பை கல்லூரி மாணவர்கள் தாக்குதல்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய படமான தர்பார் படப்பிடிப்பு புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி உள்ளது. புகைப்படங்கள் வெளியாகியதால் படக்குழுவினர் சீற்றம் கொண்டுள்ளார். ஊடக அறிக்கைகளின் படி, படப்பிடிப்பு நடத்தப்பட்ட கல்லூரியில் உள்ள மாணவர்கள் படப்பிடிப்பை  காணொளி மற்றும் படங்கள் பதிவு செய்ய முற்பட்டதாக தெரியப்படுகிறது.

மேலும் இதை தடுக்க நினைத்த பட குழுவினருக்கும் மும்பை கல்லூரி மாணவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டு மாணவர்கள் கல்லூரியின் மெர்குரியின் மீது ஏறி படக்குழுவினரை நோக்கி கற்களை ஏறிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்றும் ஊடகம் தெரிவிக்கின்றது. இச்சுழலால்  பதட்டமான நிலை ஏற்பட்டது. 

இந்த படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கல்லூரி நிர்வாகத்திடம் மாணவர்களின் செய்த இடையூறலை எடுத்தச்சென்றார். படப்பிடிப்பிற்கான இடம் மாறுதலை இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தி எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஊடகங்களின் அறிக்கைகள் படி, தற்போதைக்கு படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்று அறியப்படுகிறது.

 சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் 167 படமான தர்பாரில் இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு காக்கி உடையில் தோன்றி உள்ளார். இப்படத்தில் அவர் காவல் அதிகாரியாக நடிக்கின்றார். மேலும் நயன்தாரா இப்படத்தின் கதாநாயகியாகவும் இசையமைப்பாளர் அனிருத் இசைஅமைத்துள்ளார், ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் பணியாற்றுகிறார். மேலும் தர்பார் அடுத்த வருடம் பொங்கல் தினங்களில் வெளியிடப்படும் என்று ஏதிர்பாக்கப்படுகிறது.

நிவேதா தாமஸ் மற்றும் யோகி பாபு ஆகியோர் இப்படத்தில் உள்ளனர் என்று கசிந்த படத்தின் மூலம் தெரியப்படுகிறது. மேலும் வெளிவந்த படங்களின் மூலம் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் விவரம் வெளிய கசிந்துள்ளது. கடந்த வாரம் வெளியிடப்பட்ட அறிக்கையில்  ப்ராதேய்க் பபெர் படத்தின் வில்லனாக நடிப்பார் என்று வெளியிட்டனர். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் குழுவினர் மீது மும்பை கல்லூரி மாணவர்கள் தாக்குதல்