ads

சூரரைப் போற்று படத்தின் பாடல் குறித்த ருசீகர தகவல் இதோ

சூரரைப் போற்று

சூரரைப் போற்று

நடிகர் சூர்யா NGK படத்தின் ரிலீஸுக்கு காத்திருக்கிறார், வரும் 31 ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது. அதே போல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் மற்றும் டப்பிங் பணிகளில் முடிந்து அந்த படமும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அதற்கு அடுத்ததாக அவர் நடிக்கும் படத்தை நடிகர் மாதவன் நடிப்பில் வெற்றிபெற்ற இறுதிச்சுற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா சூரரைப் போற்று என்ற படத்தை இயக்கி வருகிறார்.

அந்த படத்தின் இசையமைப்பாளராக பணியாற்றி வரும் ஜி.வி படம் குறித்து ஏற்கனவே கூறியதாவது, சுதா கொங்கரா இயக்கி வரும் புதிய சூர்யா படத்திற்கு இசையமைக்கிறேன், ஷூட்டிங்கிற்கு முன்னதாக படத்தின் பாடல்களை முடித்து விடுவேன் என்று நம்புகிறேன், என் படங்களில் கூட இல்லாத அளவிற்கு இந்த படத்தின் இசையில் ஒரு மேஜிக் நிகழ்ந்துள்ளது. அது ரசிகர்களுக்கு நிச்சையம் சர்ப்ரைஸாக இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் எல்லா பாடல்களுமே புதிய கூட்டணியில் உருவாக்கி இருப்பதகாவும் கூறினார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். சூர்யா நடிக்கும் இந்த 38வது படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக நடிகர் சூர்யா, படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா ஆகியோர் அஜ்மீரில் உள்ள புகழ்பெற்ற தர்ஹாவில் சிறப்பு வழிபாடு செய்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகப் பரவி வந்தது. மேலும் படத்திற்காக ஒரு சிறிய பூஜை பிரத்தியேகமாக போடப்பட்டது.

இந்த பூஜையில் சிவகுமார், கார்த்தி, ஜோதிகா, சுதா கொங்கரா, ஜி.வி.பிரகாஷ் குமார், கதாநாயகி அபர்ணா, ஒளிப்பதிவளார் நிகேத் தயாரிப்பாளர் குநீத் மொங்கா ஆகியோர் கலந்து கொண்டனர். தற்பொழுது வெளியான தகவல் என்னவென்றால் படத்திற்காக பாடலாசிரியர் மற்றும் பிக்பாஸ் பிரபலமான சிநேகன் அவர்கள் எழுதிய படலை ரெக்கார்ட் செய்ததாக இசையமைப்பாளர் ஜி.வி .பிரகாஷ் குமார் கூறியுள்ளார். மேலும் இந்த பாடலை மாரி இரண்டாம் பாகத்தில் வரும் ரவுடி பேபி பாடலை பாடிய தீ என்ற பாடகி பாடியுள்ளதாகவும் கூறியுள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி .பிரகாஷ் குமார் அவர்கள்.

சூரரைப் போற்று படத்தின் பாடல் குறித்த ருசீகர தகவல் இதோ