இந்த வருடம் பொங்கல் விடுமுறை அன்று வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான விஸ்வாசத்திற்குப் பிறகு தல அஜித்தின் இரண்டாவது 59 வது படம் நேர் கொண்ட பார்வை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட உள்ளது. இந்த வருடத்தின் இரண்டாவது படமாக நேர் கொண்ட பார்வை வெளியாக உள்ளது. மேலும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலை தொடங்கிய நிலையில் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றிக்குப் பிறகு வினோத் இப்படத்தை இயக்கியுள்ளார்.

சில வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் டிரெய்லர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியது. இதைத் தொடர்ந்து, த்திஇ பாடிய வானில் இருள் என்ற பாடல் திரைப்படத்தின் முதல் ஒற்றை பாடலாக வெளியிடப்பட்டது. இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இரண்டாவது பாடல் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த பாடலில் பாலிவுட் நடிகை கல்கி கோச்லின் சிறப்பு தோற்றத்தில் வருகின்றார். இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், பிக் பாஸ் 3 போட்டியாளர் அபிராமி, வித்யா பாலன், ஆண்ட்ரியா தாரியாங், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

பாடல் வெளியாகி இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட பார்வையாளர்கள் பாடலை பார்த்துள்ளனர். பாடல் வரிகளை கொண்டு இரண்டாவது பாடல் வீடியோவை வெளியிட்டு உள்ளனர் படக்குழுவினர்.