ads

லாரன்சின் தீடீர் முடிவு: பதில் அளிப்பாரா பாலிவுட் நடிகர்

ராகவா லாரன்ஸ் விலகல்

ராகவா லாரன்ஸ் விலகல்

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா பகுதி 2 ஹிந்தி மொழியில் படம் எடுத்த வெளியிடவிருந்தது. இப்படத்தில் அக்ஷய் குமார், கியார அத்வானி , மாதவன் மற்றும் பலர் நடிக்கின்றனர். தமிழில் சரத்குமார் நடித்த கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கவிருந்துதாக பட வட்டாரங்கள் தெரிவித்தனர். 

ஹிந்தி மொழியில் வெளியாகும் படத்தின் பெயர் லட்சுமி பாம் என்று பெயரிடப்பட்டு படத்தின் முதல் லுக் வெளியானது.  இயக்குனர் என்ற முறையில் படத்தின் முதல் பார்வையில் லாரன்ஸ் பெயர் குறிப்பிடப்படவில்லை. மேலும் இயக்குனரிடம் அறிவிக்காமலும், அனுமதி இல்லாமலும் வெளியிட்டு உள்ளனர். 

லாரன்ஸ் அளித்த பேட்டியில், அவரது அறிவுரை இல்லாமல் படத்தின் முதல் லுக் வெளியிட்டு அதில் இயக்குனர் பெயர் குறிப்பிடாமல் கதாநாயகன் அக்ஷய் குமார் பெயர் மட்டும் குறிப்பிட்டிருந்தது. அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தலைப்புடன் வெளியிட்டுள்ளார். லாரன்சிடம் ஊடக நபர்கள் முதல் லுக் பற்றி கேட்கும் போது தன் இந்த விஷயம் அறியவந்துள்ளார். 

இவ்வாறான செயலால் சற்றும் மனமுடைந்து போன ராகவா லாரன்ஸ்  ஹிந்தி பட இயக்கத்தில் இருந்து வெளிவருவதாக அறிவித்தார். தமிழ் இயக்குனர்களுக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கவில்லை எனவே மதியார் தலை வாசலை மிதிக்க மாட்டேன் என்று பேட்டியில் கூறினார். இயக்குனர் என்ற அங்கீகாரம் கூட இல்லாத இடத்தில் என்னால் பணியாற்ற முடியாது என்றார்.

மேலும் கதை மற்றும் அதற்கான உரிமத்தை நடிகர் அக்ஷய் குமரிடமும், தயாரிப்பாளர்களுக்கு தருவதாக கூறினார். முறையாக அவர்கள் கதை உரிமம் கேட்கும் பட்சத்தில் உரிமையை அளிப்பேன் உரிமை இல்லாத வேதனை நன்றாக தெரியும் அந்த வேதனையை யாருக்கும் அளிக்க விரும்பவில்லை என்று கூறினார். இயக்குனர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட அறிக்கைக்கு பாலிவுட் இப்பட குழுவில் இருந்த எந்த வித பதிலும் வரவில்லை.

லாரன்சின் தீடீர் முடிவு: பதில் அளிப்பாரா பாலிவுட் நடிகர்