ads

கண்டிப்பா பண்ணலாம் நண்பா, கருணாகரனுக்கு தளபதி விஜய் கொடுத்த வாக்குறுதி

கருணாகரனுக்கு தளபதி கொடுத்த வாக்கு

கருணாகரனுக்கு தளபதி கொடுத்த வாக்கு

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனது டயலாக் காமெடியின் மூலமாக பிரபலமானவர் நடிகர் கருணாகரன் அவர்கள். முதன் முதலில் கலைஞர் தொலைகாட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குனர் எனும் நிகழ்ச்சியில் வரும் குறும்படங்களில் மூலம் பிரபலமானார். கலகலப்பு எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். பிறகு பல தமிழ் படங்களில் நடித்து தனது அசராத காமெடி வசனங்களால் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். தற்பொழுது நடிகர் மற்றும் இயக்குனர் திரு.எஸ்.ஜே.சூர்யா அவர்களது நடிப்பில் நாளை வெளியாக உள்ள மான்ஸ்டர் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

எலி தொல்லையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன். இந்த வாய்ப்பிற்கு முன்னதாக நீண்ட நாட்கள் வேறு பட வாய்ப்புகள் இல்லாமல் கொஞ்சம் தடுமாறினார் நடிகர் கருணாகரன். அதற்கு காரணம் டுவிட்டர் பக்கத்தில் இளையதளபதி விஜய் அவர்களது ரசிகர்களுக்கும் அவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் தான் என்கின்றனர் சிலர். சர்கார் இசை வெளியிட்டு விழாவில் நமது இளையதளபதி பேசியது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவுரை கூறினால் மட்டும் போதாது, அதை ரசிகர்கள் பின் தொடருகிறார்களா என்றும் பார்க்கவேண்டும் என்று கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலாக விஜய் ரசிகர்கள் கண்ட மேனிக்கு அவரை டுவிட்டரில் வசைபாடினர்.

பதிலுக்கு அவரும் விடாமல் எதிர்மறையாக பேசியது தளபதி ரசிகர்கள் மத்தியில் கருணாகரனுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது. நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவர்களது சினிமா நண்பர்களான எல்லோரும் இருந்தனர். ஆனால் கருணாகரனுக்கு சின்ன வாய்ப்பு கூட அந்த படத்தில் கிடைக்கவில்லை. இதற்கும் கருணாகரனின் டுவிட்டர் பதிவுதான் காரணமாக இருக்குமோ என்னவோ. விஜய் ரசிகர்களிடம் அவர் மன்னிப்பு கேட்ட பிறகே இந்த பிரச்சனை முடிவிற்கு வந்தது. சமீபத்தில் அவர் பிரபல ஊடகத்திற்கு பேட்டி கொடுத்த பொழுது இளைய தளபதி விஜய் அவர்களுக்கும் அவருக்கும் நடந்த நேர்முக சந்திப்பை பற்றி வெளிப்படையாக கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது தளபதியுடன் இருமுறை இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது, நண்பன் படத்தில் என்னை நடிக்க கேட்ட பொழுது கலகலப்பு படத்தில் பிஸியாக இருந்தேன், புலி படத்தில் நடிக்க கேட்ட பொழுது உப்பு கருவாடு இன்று நேற்று நாளை படங்களில் நடித்துகொண்டு இருந்தேன். இப்படி இருமுறை நல்ல வாய்புகள் தவறி போய்விட்டது. ஒரு முறை விஜய் அவர்களை நேரில் சந்துக்கும் வாய்ப்பு கிடைத்தது, நான் தவறவிட்ட வாய்ப்புகளை பற்றி கூறினேன். அதற்கு அவர் கண்டிப்பா பண்லாம் நண்பா என்று கூறினார் என்று கூறியுள்ளார். மேலும் இளைய தளபதி விஜயுடன் இணைந்து நடிக்க காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

கண்டிப்பா பண்ணலாம் நண்பா, கருணாகரனுக்கு தளபதி விஜய் கொடுத்த வாக்குறுதி