ads

சூர்யாவுடன் நேரடியாக பேசியதால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள், அதிரும் இணையதளம்

சூர்யா

சூர்யா

தமிழ் சினிமாவில் ஒரு தன்னிகரற்ற நடிகர் என்றால் அது நமது சூர்யா அவர்கள் தான். அவருக்கு இணை அவரே என்று தனது ஒவ்வொரு படத்திலும் நிரூபித்துக் கொண்டிருகின்றார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை மின்னல் வேகத்தில் நடித்து முடித்துகொண்டிருகிறார். அவரது உழைப்பையும், கதாபாத்திரத்திற்காக அவர் கொடுக்கும் பங்களிப்பையும் அவரது ரசிகர்கள் நன்கு அறிவார்கள். ஆகவே தாமதமாக வந்தாலும் படம் தரமாக இருக்கும் என்பதில் அவரது ரசிகர்கள் எந்த விதமான சந்தேகமும் படுவதே இல்லை எனலாம்.

காப்பான் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகளை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பிய சூர்யா அவர்கள் என்ஜிகே படத்தின் ரிலீஸ் வேலைகளில் முழு ஆழமாக ஈடுபட்டுள்ளார். முதல் முறை இயக்குனர் செல்வராகவன் நடிகர் சூர்யாவை வைத்து இயக்கியிருக்கும் படம் என்பதனால் இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் உச்சகட்ட ஆர்வத்தில் இருக்கின்றனர். இந்த படத்திற்கு பிறகு இறுதிச்சுற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கும் சூரரைப் போற்று என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொல்வாராம் நடிகர் சூர்யா. இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது வெளியாகியுள்ள தகவல் என்னவென்றால் நடிகர் சூர்யா நடித்திருக்கும் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் டுவிட்டர் வலைத்தளத்தில் ஒரு பிரத்தியேகமான ஈமோஜி ஒன்றை வெளியிட்டுள்ளனர். ரசிகர்கள் படம் குறித்து பதிவிடும் விஷயங்களை இந்த ஈமோஜியுடன் பதிவிட்டு வருகின்றனர். ஆகவே தற்பொழுது டுவிட்டரில் இது வைரலாகி வருகிறது. மேலும் என்ஜிகே படம் வரும் மே 31 ஆம் தேதி வெளியாவதால் படக்குழுவினர் அனைவரும் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். எல்லாவற்றையும் தாண்டி ரசிகர்களுக்காக நேரடியாக இணையத்தில் லைவ்வாக வந்துள்ளார் நடிகர் சூர்யா. ஆம் ரசிகர்களே டுவிட்டர் வலைத்தளத்தில் நேற்று மாலை 5 மணி அளவில் லைவாக வந்தார் சூர்யா.

ரசிகர்கள் கமண்ட்ஸ் மூலமாக கேட்ட கேள்விகளுக்கு நேரடியாகவும், வெளிப்படையாகவும் பதிலளித்தார் நமது சூர்யா. இந்த பொன்னான வாய்ப்பை தவறவிடாமல் நடிகர் சூர்யாவிடம் கேட்க வேண்டிய கேள்விகளை எந்த வித ஒளிவுமறைவும் இன்றி பளிச்சென்று கேட்டனர் ரசிகர்கள். அந்த கேள்விகளுக்கு கூலாக பதிலளித்தார் சூர்யா. நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று மாலை 7 மணி அளவில் இயக்குனர் வெங்கட் பிரபுவின் அடுத்த புதிய படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டார் சூர்யா. இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் அடுத்து ஒரு புதிய படத்தை தனது பிளாக் டிக்கெட் தயாரிப்பு நிறுவனம் சார்பாக தயாரிக்க உள்ளார். இது அவர் தயாரிக்கும் மூன்றாவது திரைப்படம்.

இந்த படத்தை இயக்குகிறார் இளையதளபதி விஜய் அவர்களை வைத்து புலி என்ற படத்தை இயக்கிய இயக்குனர் திரு.சிம்புதேவன் அவர்கள். படத்தின் தலைப்பு மற்றும் சில சுவாரஸ்யமான தகவலை நேற்று மாலை 7 மணி அளவில் தனது டுவிட்டர் பக்கம் மூலமாக வெளியிட்டார் நடிகர் சூர்யா.

சூர்யாவுடன் நேரடியாக பேசியதால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள், அதிரும் இணையதளம்