ads

தனது குறும்பான ட்விட்டர் கருத்துக்கு தமிழ் நடிகையிடம் வாங்கிக் கட்டிய கிரிக்கெட் ரசிகர்

நடிகை விஜயலக்ஷ்மி

நடிகை விஜயலக்ஷ்மி

சென்னை 28 படம் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை விஜயலக்ஷ்மி. பின்னர், அஞ்சாதே, சரோஜா, பிரியாணி போன்ற தமிழ் படங்களில் நடித்தார்.  சமீபத்தில், ஐபில் கிரிக்கெட் ரசிகர் ஒருவருடைய ட்விட்டர் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அவர் கூறிய கருத்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோலாகலமாக நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் லீகு சுற்று ஆட்டங்கள் முடிவடைந்து பிளே ஆப் சுற்று நடந்து வருகிறது. பிளே ஆப் சுற்றில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்றது. முதல் பிளே ஆப் சுற்றில் தோல்வியடைந்த அணி எலிமினதோர் சுற்றில் வெற்றி பெரும் அணியுடன் மோத வேண்டும். அவ்வகையில், சென்னை அணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு இருக்கிறது.

இந்நிலையில், தளபதி சூர்யா என்ற ட்விட்டரின் முகப்பு பெயரில், வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆதரவாக தனது ட்விட்டர் கருத்தை பதிவிட்டிருந்தார், அந்த ரசிகர்.  அதில், "கிளம்பு கிளம்பு, ஃபைனலுக்கு வந்தாலும் அடி தான் வாங்க போறீங்க" என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களை கலாய்க்கும் விதமாக பதிவிடப்பட்டிருந்தது.

அதற்கு, "அட பாவி, தமிழ் பேசுற, தளபதி சூர்யான்னு சொல்ற. மும்பை இண்டியன்ஸ் ரசிகரா. ஃபைனலுக்கு வந்துட்டு பேசுவோம் நாங்க. அதுவரைக்கும் நீங்க சத்தமா பேசிகோங்க" என்று தமிழ் நடிகர்களான சூரிய விஜயின் ரசிகர்களாக இருந்து கொண்டு மும்பை இந்தியன்ஸை ஆதரிக்கிறாயா என்ற வினா எழுப்பியதோடு, சென்னை அணி இறுதி ஆட்டம் வரும் வரை தான், உங்களால் இந்த வெற்றியை கூப்பாடு போட முடியும் என்று ரசிகரின் பாணியிலேயே பதிலடி கொடுத்துள்ளார், நடிகை விஜயலக்ஷ்மி.

தனது குறும்பான ட்விட்டர் கருத்துக்கு தமிழ் நடிகையிடம் வாங்கிக் கட்டிய கிரிக்கெட் ரசிகர்