Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

சீன சுகாதார அதிகாரிகள் புபோனிக் பிளேக் நோயை உறுதிப்படுத்தியுள்ளனர்

சீன சுகாதார அதிகாரிகள் புபோனிக் பிளேக் நோயை உறுதிப்படுத்தியுள்ளனர்

கொரோனா வைரஸ் தாக்கம் குறையும் முன்பே, 14 ஆம் நூற்றாண்டில் கறுப்பு மரணத்தை ஏற்படுத்தி சுமார் 50 மில்லியன் மக்களைக் கொன்ற ஒரு நோய் மீண்டும் தலையை உயர்த்தியுள்ளது என்று ஒரு புதிய மருத்துவ அறிக்கை கூறுகிறது.

பெய்ஜிங்கில் இருந்து வடமேற்கில் சுமார் 560 மைல் தொலைவில் உள்ள பேயனூர் நகரில் ஒருவர்  தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உயிருக்கு ஆபத்து இல்லாமல் உள்ளார், அதே நேரத்தில் 15 வயது சிறுவனுக்கும் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொரோனா வைரஸ் உள்ள விலங்குகளை உண்பதனால் இன்று கொரோனா வைரஸ் தாக்கம் உலகமுழுவதும் உள்ளது, இதை போலவே பிளேக்கை சுமக்கக்கூடிய விலங்குகளை வேட்டையாடி இருப்பதினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கின்றனர்.

ஒரு பாக்டீரியா தொற்று காரணமாக ஏற்படும் புபோனிக் பிளேக் ஒரு காலத்தில் பூமியில் மிகவும் அஞ்சப்படும் நோய்களாக இருந்தபோதிலும், இப்போது அதை நுண்ணுயிர் எதிர்ப்பிகளால் எளிதில் சிகிச்சையளிக்க முடியும்.

14 ஆம் நூற்றாண்டில் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பா முழுவதும் சுமார் 50 மில்லியன் மக்களைக் கொன்ற கருப்பு மரணத்திற்கு இது காரணமாக இருந்தது.

இது 1665 ஆம் ஆண்டின் பெரும் பிளேக்கின் போது லண்டனின் மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியைக் கொன்றது, அதே நேரத்தில் 19 ஆம் நூற்றாண்டில் சீனாவிலும் இந்தியாவிலும் 12 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த நோயால் இறந்தனர்.

2017 ஆம் ஆண்டில், மடகாஸ்கரில் மீண்டும் வந்த போது, 300 க்கும் மேற்பட்டவர்கள் நோய் தொற்றுக்கு பாதித்தபோது, 30 க்கும் குறைவானவர்கள் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.

சீன சுகாதார அதிகாரிகள் புபோனிக் பிளேக் நோயை உறுதிப்படுத்தியுள்ளனர்