IND vs SA 2nd டெஸ்ட்: போட்டியை டிரா செய்யுமா இந்திய அணி ?


இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, தற்போது இந்திய அணிக்கு மிகவும் சவாலான நிலையில் உள்ளது. தொடரை சமன் செய்ய போராடி வரும் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவின் இமாலய இலக்கை துரத்த முடியாமல் திணறி வருகிறது.
முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி 489 ரன்கள் குவிக்க, இந்திய அணி வெறும் 201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 260/5 ரன்களுடன் டிக்ளேர் செய்ய, இந்திய அணி 549 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கியது.
தற்போதைய ஸ்கோர் நிலவரப்படி, தென்னாப்பிரிக்கா அணி நிர்ணயித்த 549 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்தி வரும் இந்திய அணி, 38.0 ஓவர்களில் 70 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளது.
வெற்றிக்கு இந்திய அணிக்கு இன்னும் 479 ரன்கள் தேவை. கைவசம் 5 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளதால், இன்று நடைபெறும் ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணி டிரா செய்வதற்கு மீதமுள்ள வீரர்கள் முழுமையாகப் போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இந்த மோசமான சூழ்நிலையில் இந்திய அணி வெற்றி பெறுவது என்பது கிட்டத்தட்ட சாத்தியமில்லாத ஒன்று. எனவே, ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும், எஞ்சியுள்ள வீரர்கள் களத்தில் நிலைத்து நின்று, எப்படியாவது இந்த டெஸ்ட் போட்டியை டிரா செய்ய வேண்டும் என்பதாகவே உள்ளது.