Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

டுவைன் பிராவோ கோயம்புத்தூரில் உள்ள பேட்மேனை சந்தித்தார்

டுவைன் மற்றும் பிராவோ அருணாசலம் முருகானந்தம்

மேற்கு இந்தியா கிரிக்கெட் வீரரான டுவைன் பிராவோ, பெண்களின் மாதவிடாய் காலங்களில் உதவ குறைந்த விலை நாப்கின்களை தயாரிக்க டிரினிடாட் மற்றும் டொபாகோவில் பெண்களை கொண்ட குழு ஒன்றை விரைவில் அமைக்கவுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல்ரவுண்டரான பிராவோ கோயம்புத்தூரில் உள்ள சந்தையில் மலிவு விலையில் நாப்கின்களை அறிமுகப்படுத்தியதற்காக பத்ம ஸ்ரீ விருது பெற்ற அருணாசலம் முருகானந்தத்தை சந்தித்தார். 

அண்மையில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளின் போது  முருகானந்தத்தின் பணிகள் பற்றி அறிந்து  கொண்ட அவரை சந்திக்க விருப்பம் தெரிவித்தார். கோவையில் 'பேட்மேன்' முருகானந்தத்தின் முகவரியை பிராவோவின் மேலாளர்கள் உறுதிப்படுத்திய பின்னர், 35 வயதான கிரிக்கெட் வீரர்  அவரை சந்திப்பதற்காக டிரினிடாட் மற்றும் டொபாகோவிலிருந்து இன்றைய தினம் கோவையில் உள்ள கே.என்.ஜி புதூருக்கு வந்தடைந்தார்.

கலந்துரையாடலின் போது, ​​பிராவோ தனது நாட்டில் பல பள்ளி பெண்கள் மாதவிடாய் காலங்களில் வகுப்புகளைக் காணப்படுவதில்லை என்றும், மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு மேற்கு தீவுகளில் மிகவும் தேவை என்றும் குறிப்பிட்டு கூறினார். 

முருகானந்தம் அவர்கள்  குறைந்த விலையில் சுகாதார நாப்கின்கள்  உற்பத்தி செய்யும் இயந்திரத்தை டிரினிடாடிற்கு அனுப்புவதாக உறுதியளித்தார். கோவையில் இருந்து கப்பல் மூலம் ஏற்றுமதி செலவை பிராவோ ஏற்று கொள்வதாகவும், ஆனால் இயந்திரம் இலவசமாக அவருக்கு இலவசமாக அளிப்பதாக உறுதி அளித்தார். தனது இயந்திரம்  பிராவோவுக்கு கிடைக்க ஒன்றரை மாதங்கள் ஆகலாம், அதே நேரத்தில் 10 நாட்களுக்குள் சாதனம் தயார் நிலையில் இருக்கும் என முருகானந்தம் தெரிவித்தார்.

கிரிக்கெட் வீரர் பிராவோ சாதனத்தின் செயல்பாட்டைக் கண்டு, தனது நாட்டிற்கு கொண்டு செல்ல விருப்பம் தெரிவித்ததாகவும் கூறினார். மேலும் அறிவுறுத்தல்களை கவனமாகக் கற்றுக்கொண்டபின் பிராவோ அவர்கள் இரண்டு நாப்கின்களையும் செய்தார் எனவும் முருகானந்தம் தெரிவித்தார். பிராவோ உடனான சந்திப்பு ஆச்சரியமாக இருந்ததாகவும் ஏன்னெனில் அவருக்கு தெரிந்த ஒரே கிரிக்கெட் வீரர் சச்சின் என பேட்டியில் கூறினார் முருகானந்தம்.

மேலும், இந்த காரணத்திற்காக தனது நாட்டில் விழிப்புணர்வை மேம்படுத்துவதில் பிராண்ட் தூதராக பிராவோ செயல்படுவார் என கூறினார். முருகானந்தம் கண்டுபிடித்த இயந்திரம் டிரினிடாட் மற்றும் டொபாகோவில் இயங்கத் தொடங்கினால், அவரது சாதனத்தைப் பயன்படுத்தும் நாடுகளின் மொத்த எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துவிடும். பிராவோ அவரது பிஸியான கிரிக்கெட் கால கட்டத்திலும், பிராவோவின் வருகை மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு என்பது காலத்தின் தேவையாக இருப்பது நிரூபணம் ஆகிறது என்று முருகானந்தம் கூறினார். 

டுவைன் பிராவோ கோயம்புத்தூரில் உள்ள பேட்மேனை சந்தித்தார்