Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

யுவராஜ் சிங்கிற்கு அமுல் நிறுவனம் அன்பின் அடையாளமாக கார்ட்டூன் வெளியீட்டு

யுவராஜ் சிங்

யுவராஜ் சிங் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றாலும் தனக்கென உருவாக்கியுள்ள ரசிகர் பட்டாளங்கள் அன்பையும் ஆதரவையும் இன்னும் அதிகமா பெற்று கொண்டிருக்கிறார். 18 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி யாரும் முறியடிக்காத வகையில் பல சாதனைகளை புரிந்துள்ளார். 

இந்தியாவின் புகழ்பெற்ற பால் நிறுவமான அமுல், பல்வேறு போக்குடைய தலைப்புகளுக்கு தனது படைப்பாற்றல் மற்றும் நகைச்சுவை வளத்தை கொண்டு பிரத்யேக கார்ட்டூன்களை வெளியிடுவர். கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்ற யுவராஜ் சிங் அவர்களுக்கு அமுல் நிறுவனம் கார்ட்டூன் மூலம் சிறப்பித்து உள்ளனர். 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி 20  போட்டியில் தொடர்ச்சியாக ஆறு பந்துகளில் எல்லை தாண்டி ஆறு ரன்களை அடித்து தனிப்பெரும் சாதனையை நிகழ்த்தினார். இதனை நினைவு கூறும் விதமாக கார்டூனில் சப்கே சக்கே சூடா தியா (Sabke chhakke chhudaa diye!) வாசகத்துடன் வெளியிட்டது. உங்களுக்கு பிடித்திருப்பதை நாங்கள் நேசிக்கிறோம் என்று விளக்கும் வாசகமாக (yu love it ! vi love it !) குறிப்பிட்டு உள்ளனர்.


2007 மற்றும் 2011 ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக்கோப்பை போட்டிகளில் வெற்றிகளை சந்திக்க யுவராஜ் சிங் பெரும் பலமாகவும் தனது பங்களிப்பையும் பெருமளவில் தந்தார். தந்து ஓய்வு பற்றி அறிவித்த பின்னர் சமூக வலைத்தளங்களில் பெரும் ஆதரவும், அன்பும், அரவணைப்பும் பெற்ற வண்ணம் உள்ளார். 

தனது கிரிக்கெட் வரலாற்றில் யுவராஜ் சிங் 304 ஒருநாள் போட்டிகளில் 8,701 ரன்கள், 40 டெஸ்ட் போட்டிகளில் 1,900 ரன்கள் மற்றும் 58 டி 20 போட்டிகளில் 1,177 ரன்களையும் குவித்துள்ளார். 

யுவராஜ் சிங்கிற்கு அமுல் நிறுவனம் அன்பின் அடையாளமாக கார்ட்டூன் வெளியீட்டு