Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

தனக்கு எதிராக கோஷமிட்ட மோடி ஆதரவாளர்களை நெகிழவைத்த பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி

நடந்து வரும் பொது தேர்தலை முன்னிட்டு இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் பல பிரபல கட்சி தலைவர்கள் வாக்கு சேகரிப்பு பணிகளிலும், மக்களை சந்தித்து சில போதுக்கூடங்களிலும் கலந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் சார்பாக தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள முதல் முறை மத்திய பிரதேசத்திற்கு வந்தார் பிரியங்கா காந்தி. இந்தூர் அருகே ராஜ் மோஹல்லாவிலிருந்து சாலை பிரசாரத்தை பிரியங்கா காந்தி தொடங்கி வைத்தார். பின்னர் மற்றொரு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்ள பிரியங்கா காந்தி விமான நிலையம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். வழிநெடுகிலும் உள்ள மக்களை பார்த்து கையசைத்தவாறு சென்றார். அப்போது சாலையில் ஒரு இடத்தில் சில பாஜக ஆதரவாளர்கள் ஒன்று கூடி “மோடி மோடி” என பிரியங்காவை வெறுப்பேற்ற வகையில் கோஷங்களை எழுப்பினர். இதை பார்த்துவிட்டு தனது வாகனத்தை உடனடியாக நிறுத்தினார் பிரியங்கா காந்தி. உடனே தகாரை விட்டு கீழே இறங்கி கோஷம் எழுப்பியவர்களை நோக்கி வேகமாக சென்றார். உடன் பாதுகாப்பு அதிகாரிகளும் சென்றனர்.

அவர் பாஜக ஆதரவாளர்களுடன் கைகளை குலுக்கி “உங்கள் எண்ணம் பலிக்க வாழ்த்துகள்” என அவரது வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் நீங்கள் உங்கள் வழியில் பயணியுங்கள். நான் என் வழியில் பயணிக்கிறேன் என கூறிவிட்டு சென்றார் பிரியங்கா காந்தி. இதனால் அந்த பாஜக ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல பரவி

வருகிறது. பிரியங்கா காந்தியின் இந்த செயல் இந்தியா முழுவதும் இருக்கும் பாஜக ஆதரவாளர்களை அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது. அவர்களது பாணியிலேயே அவர்களுக்கு பதிலளித்த பிரியங்கா காந்தியின் புத்தி கூர்மையை மெச்சி பலர் சமூக வலைத்தளங்களில் அவரை பாராட்டி வருகின்றனர்.

மேலும் பிரியங்கா காந்தியிடம் இருந்து மற்ற அரசியல் தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சிலர் கூறி வருகின்றனர். “வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம்” என்றது போல். பிரியங்கா காந்தியின் இந்த அசால்ட்டான நடவடிக்கை இளைஞர்கள் மத்தியில் புதிய கிளர்ச்சியை உண்டுபண்ணி இருக்கிறது. அது போல் நேற்று போபாலில் பிரச்சாரம் செய்த போது நேரு மைதானத்தில் ஏராளமான பெண்கள் இருந்தனர். அவர்களுடன் தடுப்பு கட்டைக்கு வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தார். திடீரென உற்சாக மிகுதியால் அவர்களை பார்க்க தடுப்பு கட்டையை எகிறி குதித்து சென்ற சம்பவம் வைரலாகி வருகிறது.

தனக்கு எதிராக கோஷமிட்ட மோடி ஆதரவாளர்களை நெகிழவைத்த பிரியங்கா காந்தி