Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

என் அரசியல் நுழைவு அடுத்த சட்டசபை தேர்தலின்போது: ரஜினிகாந்த்

என் அரசியல் நுழைவு அடுத்த சட்டசபை தேர்தலின்போது: ரஜினிகாந்த்

தமிழ் நாட்டில் தேர்தல் தினத்தன்று 'அடுத்த வாக்கு ரஜினிக்கு' என்ற ஹாஷ்டக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனதையடுத்து ரஜினிகாந்த் அண்மையில் அளித்த பேட்டியில் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிடப்போவதாக மறுபடியும் உறுதி செய்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளாரா என்று கேட்டதற்கு, "234 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட தேர்தல் வரவுள்ளது... விரைவில் அறிவிப்பு (கட்சி தொடங்குவது பற்றி). தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்." என்றார் ரஜினி. அவரது ரசிகர்கள் அவரைப் பற்றி சமூக ஊடகங்களில் அவருக்கு ஆதரவு தெரிவித்ததைப் பற்றி பேசுகையில், அவர் கூறியதாவது "அவர்கள் ஆர்வமாக உள்ளனர் என்று எனக்குத் தெரியும். நான் என் ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன். "

மே 23 ம் திகதி முடிவுக்கு பின்னர் கட்சி தொடங்குவதாகத் தீர்மானிப்பார் என்று திரு ரஜினிகாந்த் தெரிவித்தார். சமீபத்தில் நடந்த தேர்தலில் தமிழ்நாட்டில் 72 சதவீத வாக்குப்பதிவு நியாயமானது என்றும், நகரத்தில் வாக்கெடுப்பு குறைவாக இருந்தது ... அதற்கு நீண்ட வாரஇறுதி மற்றும் மக்கள் விடுமுறைக்கு சென்றிருக்கலாம் போன்றவை காரணமாக இருக்கலாம்" என்று கூறினார்.

என் அரசியல் நுழைவு அடுத்த சட்டசபை தேர்தலின்போது: ரஜினிகாந்த்