Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளூர் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்

மூன்று ஆண்டுகள் காலதாமதற்கு பின்னர், தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான முதல் படியை மாநில தேர்தல் ஆணையம் , வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க மற்றும் வாக்குப்பதிவு நிலையங்களை அமைப்பதற்கான வர்த்தமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மாநிலத்தில் 2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற்றது. மீண்டும் 2016  ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறவிருந்தது ஆனால்.தி.மு.க.  தாக்கல் செய்த மனுவால், அக்டோபர் 2016 ல் நடக்கவிருந்த தேர்தலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இட ஒதுக்கீடு வழங்குவதில் முரண்பாடுகள்  ஏற்பட்டதால் திமுக உயர்நீதி மன்றத்தில் மனு பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து, நிர்வாகம் செய்ய உள்ளூர் அதிகாரிகளை சிறப்பு அதிகரிகளாக நியமித்தனர் மேலும் அவர்களின் பதவி காலம் ஐந்து முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

நீதி மன்றத்தின் உத்தரவின் பெயரில், 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி மாநிலத்தில் சீர்திருத்த ஆணையம் நிறுவப்பட்டு உள்ளூர் ஆட்களுக்கு  இட ஒதுக்கீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. கமிஷன் சமீபத்தில் அதன் பரிந்துரைகளை சமர்ப்பித்தது.

அதன்படி, கமிஷன் சமீபத்தில் பாட்டியலிட்டதில், திட்டமிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு புதிதாகப் பிரிக்கப்பட்டுள்ள வார்டுகளை ஒதுக்கீடு செய்வதற்கான பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது. அதேபோல, உச்சநீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டபடி, தேர்தல் ஆணையம் தேர்தல் ஆய்வறிக்கைகளுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் டி.எஸ். ராஜசேகர் வெளியிட்டுள்ள உத்தரவு, மாவட்ட அளவையும் தொகுதி அதிகாரிகளையும் 2016 ஆம் ஆண்டில் கமிஷன் கையேட்டில் அறிவுறுத்தப்பட்டபடி வாக்குப்பதிவு நிலையங்களை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். 

ஒப்புதல் பெற்ற வாக்கு  சாவடி இடங்களின்  பட்டியலை தேர்தல் அதிகாரி மாவட்ட தேர்தல் அலுவலகம், மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம், தொகுதி மேம்பாட்டு அதிகாரி அலுவலகம், கிராம பஞ்சாயத்து  அலுவலர்களுக்கு அனுப்பி விடவேண்டும். 

வாக்காளர் பட்டியல் தயாரிக்கையில், ஒவ்வொரு பக்கத்திலும்  30 வாக்காளர்கள் தங்கள் படத்துடன் விவரங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று தமிழ்நாடு தேர்தல் கமிஷன் தெரிவித்தது.  2011 அன்று தயாரித்த வாக்காளர் பட்டியலில் கூடுதலாக 40 வாக்காளர்கள் பெயர்கள் கொண்டிருந்தது. மேலும் இம்முறை தேர்தல் பட்டியல் ஒவ்வொரு பக்கத்திலும் வாக்கு சாவடிகளின் வரிவடிவம் கொண்டிருக்க வேண்டும்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளூர் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு