Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

சுவாரஸ்யத்துடன் டெல்லி பிரச்சாரத்தை மேற்கொள்ள காங்கிரஸ் கட்சி முனைகள் மும்மரம்

காங்கிரஸ் கட்சி முனைகள் மும்மரம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி வதேரா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சத்ருகன் சின்ஹா ​​உட்பட முக்கிய முனைகள் மக்களவை தேர்தல் வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்து வருகின்றனர். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் உட்பட 40 மூத்த தலைவர்களின் பட்டியலை வரையப்பட்டுள்ளது வரும் நாட்களில் பிரச்சாரத்தின் வேகம் அதிகரிக்கும் என்று கட்சித் வட்டாரம் தெரிவித்தனர்.

ராகுல் காந்தி அல்லது பிரியங்கா வத்ரா ஆகியோரை மே 6 ம் தேதிக்கு முன்னதாக பிரச்சார சாலைகளில் இடம்பெறுவார்கள் என்று மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர். காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களும், காந்தி உடன்பிறப்புகளும் தொகுதியில் பேரணி நடத்தாமல் சாலையில் பிரச்சார நிகழ்ச்சிகள் நடத்த திட்டம்மிட்டு உள்ளனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பேரணியில்

கலந்துகொள்ள வைத்து மக்களுக்கு பெருஞ்சுமையை ஏற்படுத்தாமல் சாலை நிகழ்ச்சிகளை மேற்கொள்கின்றனர்.

சமீபத்தில் பா.ஜ.க.வை விட்டு விலகிய முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்துவின் பிரச்சாரத் தலைவர்களின் பட்டியலில் இணைந்துள்ளார். கட்சியை விட்டு விலகியதில் இருந்து கடுமையான விமர்சங்களை வெளியிட்டுவருகிறார். குலாம் நபி ஆசாத், பஞ்சாப் முதலமைச்சர் அமீர்ந்தர் சிங், அஹ்மத் படேல், கபில் சிபல், ஆனந்த் சர்மா, ஜோதிராதித்யா சிந்தியா, ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் மற்றும் பூபீந்தர் சிங் ஹூடா ஆகியோரும் டெல்லியில் பிரச்சாரம் செய்ய உள்ளனர். டெல்லியில் ஏழு மக்களவை தொகுதிகளுக்கான வாக்கு பதிவுகள் மே 12 ம் தேதி நடைபெற உள்ளன.

சுவாரஸ்யத்துடன் டெல்லி பிரச்சாரத்தை மேற்கொள்ள காங்கிரஸ் கட்சி முனைகள் மும்மரம்