Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

640 தமிழக கிராமங்களில் தீண்டாமை இன்னும் நிலவுகிறது: சமூக விழிப்புணர்வு அமைப்பு

தீண்டாமை இன்னும் நிலவுகிறது

தமிழ்நாட்டில் உள்ள 20 மாவட்டங்களில், 640 கிராமங்களுக்கும் மேலாக தீண்டாமை கடைப்பிடித்து வருகிறது என்று தலித் குழுமத்தின் இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு சமுதாய அமைப்பு தகவல் பெறும் உரிமை சட்டம் வினவுதலில் தகவல் தெரிவிக்கப்பட்டது. 2014 முதல் 2018 வரையிலான காலப்பகுதிக்கு இந்நிறுவனம் முயன்று தகவலைக் கோரியது.

ஆனால் தகவல் பெறும் உரிமை சட்டம் கீழ் எந்த கிராமத்திலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அறியப்படுகிறது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி வகுப்பின்(அட்டூழியங்களைத் தடுக்கும்) சட்டத்தின் கீழ், தீண்டாமையை மேற்கொள்கின்ற மக்களுக்கு மாநில அரசு கூட்டு அபராதங்களை விதிக்க வேண்டும். தீண்டாமை தொடர்ந்தும் இருக்கும் கிராமங்களின் மொத்த எண்ணிக்கை 646 ஆகா உள்ளது. 32 மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களில் இதுவரை 20 மாவட்டங்கள் பதிலளித்துள்ள. இந்த ஆண்டு, தமிழ்நாடு தனது 33 வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உருவாக்கியத்தை அறிவித்துள்ளது.

தகவல் பெறும் உரிமை சட்டம் மூலமாக மாவட்ட நிர்வாகத்திடமும், காவல்துறையிடமும் மனு கொடுக்கப்பட்டது. அம்மனுவில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சட்டம் (அட்டூழியங்கள் தடுப்பு சட்டம்) அமலாக்கப்பட்டதை கண்காணிக்குமாறு தெரிவிக்கப்பட்டது. ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் நிலவரங்கள் வெளிக்கொணர திட்டமிட்டனர். தலித்துகள் இன்றும் அட்டூழியங்களை எதிர்கொள்கின்றனர் என்று கிடைக்கப்பட்ட தகவல்கள் சுட்டிக்காண்பிப்பதை நிர்வாக இயக்குனர் பாண்டியன் தெரிவித்தார்.

மேலும் அமலாக்க முகவர்களின் அவா அற்ற முயற்சியால் மேல் தரப்பு மக்கள் இதனை கொண்டாடி வருகின்றனர் என்றும் கூறினார். கோயம்புத்தூர், ராமநாதபுரம், விழுப்புரம், திண்டுக்கல், திருச்சி, திருவாரூர், தர்மபுரி, சேலம், நீலகிரி, புதுக்கோட்டை, விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், சிவகங்கை, தூத்துக்குடி, நாகப்பட்டினம், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, தேனி, கடலூர் ஆகிய இடங்களில் தீண்டாமை இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. 

640 தமிழக கிராமங்களில் தீண்டாமை இன்னும் நிலவுகிறது: சமூக விழிப்புணர்வு அமைப்பு