இந்தியா

தேர்வு ரத்து கொண்டாட்டம், மாணவர் முதல்வருக்கு தீபாராதனை

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வு ஜூன் மாதம் 15 தேதி முதல் தொடங்க இருந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும்...

By புருசோத்தமன் · ·1 min read

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வு ஜூன் மாதம் 15 தேதி முதல் தொடங்க இருந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் " பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும், தேர்வு எழுத்தாமலே தேர்ச்சி பெற்றனர் " என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்வு ரத்து காரணத்தினால், அரை ஆண்டு மற்றும் காலாண்டு தேர்வுகளில் 80% மதிப்பெண்கள் கல்வியில் இறுதி மதிப்பெண்களுக்கு பரிசீலிக்கப்படும். மீதமுள்ள 20% அவர்களின் வருகை சதவீதத்திலிருந்து பரிசீலிக்கப்படும் என்று முதல்வர் கூறினார்.

இந்த சொந்தோஷத்தை கொண்டாடும் வகையில் மாணவர் ஒருவர் தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு தீபாராதனை காண்பித்து, விழுந்து வணங்கியது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவுகிறது.


View full article on தமிழ் செய்திகள்