2 வது திருமணம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை


முதல் திருமணத்தை சட்டப்படி விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்துகொள்வோருக்கு எதிராக, அசாம் மாநில அரசு ஒரு கடுமையான புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. சட்ட விரோதமான மற்றும் மோசடியான முறையில் இரண்டாவது திருமணம் செய்வோருக்கு கடுமையான சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அசாமின் இந்த கடுமையான சட்டம் குறித்த செய்தியைக் கேள்விப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த பலரும், இது ஒரு வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றும், இதேபோன்ற ஒரு கடுமையான சட்டத்தை தமிழ்நாட்டிலும் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் பொதுவெளியிலும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.