தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகள் எழுத வேண்டிய அவசியமில்லை
மார்ச் 25, இன்று தமிழக முதல்வர் அறிவித்த அறிக்கையில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகள் எழுத வேண்டிய அவசியமில்லை, அனைவரும் தேர்வுகள் இல்லாமல்...
மார்ச் 25, இன்று தமிழக முதல்வர் அறிவித்த அறிக்கையில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகள் எழுத வேண்டிய அவசியமில்லை, அனைவரும் தேர்வுகள் இல்லாமல் அடுத்த வகுப்பிற்கு செல்லலாம். இந்தியா முழுவதும் 144 தடையை பிரதமர் அறிவித்தபின், இன்று நடந்த உயர்மட்டக் கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டிஜிபியுடன், தலைமைச் செயலாளர் , மற்றும் பலர் கலந்து ஆலோசித்தபின், அறிவிப்புகளை வெளியிட்டனர்.
மேலும், தேர்வுகளை எழுத முடியாத 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பிற்காலத்தில் தேதி அறிவிப்பு வந்தபின், தேர்வு எழுதலாம். பாண்டிச்சேரி மாநிலத்திலும், 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் எழுத வேண்டிய அவசியமில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பயம் காரணமாக அவர்கள் எந்தத் தேர்வையும் எழுதத் தேவையில்லை, வீட்டிலேயே உட்கார்ந்து ஜூன் மாதம் வந்தபின் பள்ளிக்கு செல்லலாம்.