Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

வுஹன் கொரோனா வைரஸ் பாதிப்பு கேரளாவின் தற்போதைய நிலை

வுஹன் கொரோனா வைரஸ் பாதிப்பு கேரளாவின் தற்போதைய நிலை

வுஹன் கொரோனா வைரஸ் பாதிப்பு கேரளாவின் தற்போதைய நிலை: சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு செல்லும் பெரும்பாலானோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. சீனாவின் வுஹன் நகரத்தில் இருந்து முதன் முதலில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இது வரை கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 13,000 மேல் இருக்கும் என தகவுள்கள் வெளியாகியுள்ளது.

இதுவரை 300 பேர் வரை பலிகொண்ட கொரோனா வைரஸ், வேகமாக எல்லா நாடுகளிலும் பரவுவதால், பலியின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

சில நாட்களுக்கு முன் வுஹன் நகரில் படித்த கேரளாவை சேர்ந்த ஒரு மாணவி  இந்தியா வந்த பின் இவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இவரை தொடர்ந்து திருச்சூரில் இருக்கும் மற்றொரு நபருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் சில நாட்களுக்கு முன் சீனாவில் இருந்து இந்திய வந்தவர். 

இவ்வாறு சீனாவில் இருந்து வரும் அனைவர்க்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால், இவர்களுடன் விமானத்தில் பயணம் செய்த மற்றவர்களும் வைரஸ் பாதிப்பு இருந்தால், இன்னும்  கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிகம் பரவும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

வுஹன் கொரோனா வைரஸ் பாதிப்பு கேரளாவின் தற்போதைய நிலை