Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து உருவாகி வரும் ஸ்போர்ட்ஸ் திரைப்படங்கள், அடுத்து யார் படம் தெரியுமா

thalapathy 63 fanmade poster

தமிழ் சினிமாவின் ட்ரெண்டை செட் செய்வது மாதிரியான ஒரு திரைப்படம் வெளியானால். அதே பாணியில் இன்னும் சில பல திரைப்படங்கள் வெளிவருவது இயல்பாகிவிட்டது. உதாரணத்திற்கு இயக்குனர் சசிகுமார் அவர்களின் இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான சூப்பர்-ஹிட் திரைப்படம் சுப்ரமணியபுரம். இந்த படம் மதுரையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை பின்னையாக வைத்து உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த திரைப்படங்கள் மதுரையை பின்னணியாக கொண்டு உருவாகி வந்தது.

இதே போல தற்பொழுது தமிழ் சினிமாவில் ஒரு புதிய ட்ரெண்ட் உருவாகி உள்ளது. அதாவது விளையாட்டை மையமாகக்கொண்டு தற்பொழுது தமிழ் சினிமாவில் அதிகப்படியான திரைப்படங்கள் உருவாகி வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் சொந்தமாக தயாரித்து நடித்த திரைப்படம் கனா. பெண்களுக்கான கிரிகெட் பற்றிய திரைப்படமாக இது உருவாக்கப்பட்டது. இந்த படத்தை தொடர்ந்து இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி நடித்த நட்பே துணை திரைப்படம் வெளியானது. இது ஹாக்கி விளையாட்டை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த இளம் நடிகர் கதிர் ஜடா என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் கால்பந்தாட்டத்தை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. இயக்குனர் சுசீந்திரன் தற்பொழுது இயக்கி வரும் கென்னடி கிளப் பெண்களுக்கான கபடி போட்டியை மையமாக கொண்டு உருவாகிறது. இயக்குனர் சுசீந்திரன் அவர்கள் இயக்கிய வெண்ணிலா கபடி குழு ஜீவா போன்ற படங்கள் விளையாட்டை பின்னணியாக கொண்டு உருவான படங்கள் தான். சுசீந்திரனின் உதவியாளர் ஒருவர் வெண்ணிலா கபடி குழு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்பொழுது இளைய தளபதி விஜய் அவர்கள் இயக்குனர் அட்லீ அவர்களது இயக்கத்தில் நடித்து வரும் பெயரிடப்படாத புதிய படமும் கால்பந்தாட்டத்தை மையமாக கொண்டு உருவாகிவரும் படம் தான். இந்த படத்தில் இளைய தளபதி விஜய் அவர்கள் கால்பந்தாட்ட பெண்கள் அணியின் பயிற்சியாளராக நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்காக ஆறுகோடி ரூபாய் செலவில் ஒரு பிரம்மாண்டமான கால்பந்தாட்ட மைதானத்தையே உருவாகி உள்ளனர் படக்குழுவினர். இந்த விளையாட்டு படங்களில் புதிதாக இணைந்துள்ளது நடிகர் ஆதி நடிக்கும் புதிய படம்.

இந்த படத்தை ப்ரித்வி என்ற புதுமுக இயக்குனர் இயக்கி வருகிறார். பிரவின் குமார் ஒளிப்பதிவு செய்கிறார், எடிட்டர் ராகுல் இந்த படத்தில் எடிட்டராக பணியாற்றுகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படம் உருவாக உள்ளது. இந்த படத்தில் தடகள வீரராக நடிக்கிறார் நடிகர் ஆதி. தடகள போட்டியை மையமாக கொண்ட திரைப்படங்கள் தமிழ் திரையுலகில் ஏராளம்! இருந்தும் இந்த படம் சற்றே மாறுபட்ட படமாக இருக்கும் என்று நடிகர் ஆதி கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து உருவாகி வரும் ஸ்போர்ட்ஸ் திரைப்படங்கள், அடுத்து யார் படம் தெரியுமா